மனைவியையும் பிறந்து சில மாதங்கள் ஆன மகவையும் மாமனார் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறான் ஒருவன். குழந்தைக்கு அம்மை வார்த்து குழந்தை மரணித்து விட்டது என்ற செய்தி சில நாட்களில் அவனுக்கு கடிதமாக வந்து சேர்கிறது. அன்றைய தினத்தை அவன் எவ்விதம் கடந்தான் என்னும் கதையே தி.ஜா வின் ’’ஆறுதல்’’.