தமிழில் புதுமைப்பித்தனின் ‘’கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’’ மிகப் பிரபலமான ஒரு சிறுகதை. அதில் பரமசிவன் ஒரு கதாபாத்திரம். தி.ஜானகிராமன் சிவ கணங்களையும் நந்தியையும் சிவ பார்வதியையும் கதாபாத்திரங்களாகக் கொண்டு எழுதிய கதை ‘’பரமபாகவதன்’’. ஹாஸ்யம் மிளிறும் கதை.