ஒப்புகைச் சீட்டு விவகாரம் தொடர்பாக மத்திய தகவல் ஆணையத்துக்கு அனுப்பிய இரண்டாம் மேல்முறையீட்டின் தமிழாக்கம் :
அனுப்புநர்
ர. பிரபு
*****
****
பெறுநர்
மத்திய தகவல் ஆணையம்
சி.ஐ.சி பவன், பாபா கங்காநாத் மார்க்
முன்ரிகா
புது தில்லி
ஐயா,
பொருள் : தகவல் பெறும் உரிமைச் சட்டம் - இரண்டாம் மேல்முறையீடு
பார்வை : எனது சி.பி.கி.ராம்.ஸ் புகார் எண் : *****
(1) 19.11.2024 அன்று சி.பி.கி.ராம்.ஸ் ல் என்னால் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது.
(2) 21.01.2025 அன்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் மயிலாடுதுறை அஞ்சல் கண்காணிப்பாளரிடம் எனது சி.பி.கி.ராம்.ஸ் புகாரின் கோப்பினைக் கோரினேன்.
(3) 19.02.2025 அன்று மேற்படி கோப்பின் ஆவணங்கள் பல கோப்புகளில் இருப்பதால் உடனடியாக திரட்டி அளிக்கும் நிலையில் அவை இல்லை என பதில் அளித்து எனக்கு கடிதம் மயிலாடுதுறை அஞ்சல் கண்காணிப்பாளர் மூலம் அனுப்பப்பட்டது.
(4) அவரது கடிதம் கிடைத்ததும் முதல் மேல்முறையீட்டு அதிகாரியிடம் இந்த விஷயம் தொடர்பாக முதல் மேல்முறையீடு செய்தேன். அந்த அதிகாரி ‘’மேல்முறையீடு செய்தவர் தொடர்புடைய ஆவணங்களை வழங்குமாறு’’ ஆணை பிறப்பித்தார்.
(5) இத்துடன் பொது தகவல் அதிகாரியின் பதில், முதல் மேல்முறையீட்டு அலுவலரின் ஆணை, பொது தகவல் அதிகாரி ஆணைக்குப் பின் அளித்த விபரங்கள் ஆகியவை மத்திய தகவல் ஆணையத்தின் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளன.
(6) எனது இரண்டாம் மேல்முறையீட்டின் மூலம் மத்திய தகவல் ஆணையத்திடம் எனது சி.பி.கி.ராம்.ஸ் கோப்பின் முழுமையான ஆவணங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!
தங்கள் உண்மையுள்ள,
***
இடம் : மயிலாடுதுறை
நாள் : 30.04.2025