சில நாட்களுக்கு முன், ‘’திக்குத் தெரியாத காட்டில்’’ என்ற பதிவினை தளத்தில் எழுதினேன். அதனை ஒரு சிறுகதையாக எழுதிப் பார்க்கலாமா என்று தோன்றியது. சிறுகதையை எழுதத் தொடங்கினேன். கணிசமான பகுதி எழுதிய பின் தளத்தில் பதிவிட்டிருந்த பதிவிலிருந்து சில பகுதிகளை நீக்கி விட்டு பெரும்பாலான பகுதிகளை அப்படியே சிறுகதையில் இணைத்துக் கொண்டேன். கடைசியாக சில பாராக்களை எழுதினேன். சிறுகதை நிறைவு பெற்றது.
பதிவினை ‘’நகைச்சுவைக் கட்டுரை’’ என்று பதிவிட்டிருந்தேன்.சிறுகதையாக எழுதிய போது அதில் வேறு பல பரிமாணங்கள் இணைந்தன.
நான் வியப்படைந்தது பதிவு சிறுகதையில் மிகக் கச்சிதமாகப் பொருந்திக் கொண்டதே ஆகும். எனது அ-புனைவு எழுத்துக்களும் புனைவு எழுத்துக்குரிய தன்மையுடன் இருப்பதாக என்னிடம் கூறப்படுவதுண்டு.
இந்த சிறுகதை எழுதப்பட்டதில் இத்தனை எதிர்பாராமைகளும் வியப்புகளும் இருந்தது என்னை மிகவும் மகிழச் செய்தது.