நடைப்பயிற்சி செல்லத் துவங்கிய தினத்தில் ஊருக்கு காவிரி நீர் வந்து விட்டது. வெள்ளம் நிரம்ப சென்று கொண்டிருந்தது. நதியில் மூழ்கி எழ வேண்டும் என விரும்பினேன். நதியளவு அகத்துக்கு நெருக்கம் கொண்ட இன்னொருவர் இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. நதிக்கு வணக்கம். நதிக்கு வாழ்த்து. காவிரி போற்றுதும் !