பெயர், குடும்பம், குலம், குடி, ஊர், தொழில் ஆகிய அடையாளங்கள் மனிதர்களுக்கு சூட்டப்படுகின்றன ; அதனை மனிதர்கள் சூடிக் கொள்ளவும் செய்கிறார்கள். அந்த அடையாளங்கள் குறுகியவை. அதனை உணர்பவர்கள் அதில் தங்களை பிணைத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். தாமரை இலையின் மீது தண்ணீர்த்துளி இருக்கிறது. தாமரை இலை மேல் தண்ணீர்த்துளி இருந்தாலும் தனித்தே இருக்கிறது.