நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் - நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று.
-குமரகுருபரர்
இன்று காலை சிதம்பரம் சென்றிருந்தேன். தமிழகத்தில் ஆலய வழிபாட்டு நியதிகள் கிரமமாகப் பின்பற்றப்படுவதும் தினமும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் வழிபடுவதும் என இவ்விரு செயல்களும் ஒருங்கே நிகழும் ஆலயம் சிதம்பரம். சிதம்பரம் ஊர்க்காரர்களில் கணிசமானோர் ஏதேனும் ஒரு வேளை ஆலயத்துக்கு சென்று வழிபடுவதை தங்கள் வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள். இன்று வினாயகர் சதுர்த்தி என்பதால் நான்கு வீதிகளிலும் பூசனை திரவியங்கள் விற்பனை ஆகிக் கொண்டிருந்தன. தில்லை காளியம்மன் ஆலயத்திலும் சிறப்பான வழிபாடு நடைபெற்றது. எனது தொழில் சார்ந்த சில பணிகள் இருந்தன. அவற்றை மேற்கொண்டேன். இன்று சிற்றம்பலத்தையும் தில்லை காளியையும் வணங்கியது மனதுக்கு அமைதியைத் தந்தது.