அன்புள்ள நண்பருக்கு,
வணக்கம். நலமாக இருக்கிறேன்.
தங்கள் விரிவான கடிதம் கண்டது மகிழ்ச்சி. நம் நாட்டில் கல்வி என்பது கல்விக்கூடங்களில் மட்டுமே நிகழ முடியும் என்னும் நிலையும் கல்வி என்பது உத்யோகம் பெறுவதற்கான வழி என்ற மனநிலையும் உருவாகி விட்டது. அரசு மட்டுமே கல்விக்கான முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்பது இல்லை. சமூகத்துக்கும் அதற்கான பொறுப்பு இருக்கிறது . சமூக நிறுவனங்கள், செல்வந்தர்கள், தனி மனிதர்கள் கல்வி அளிக்கும் பணியை தன்னார்வத்துடன் ஏற்க வேண்டும்.
1950களில் மரவள்ளிக் கிழங்கு தமிழகத்தின் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது குறித்த அனுபவம் ஆர்வமூட்டியது.
தங்கள் கடிதத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அந்த மாணவனுக்கு அனுப்பியிருக்கிறேன். நன்றி!
அன்புடன்,
பிரபு