Tuesday, 4 November 2025

திருமகள்

எனது நண்பர் ஒருவர் நலம் குன்றியிருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தவர் வீடு திரும்பியிருக்கிறார். நாளின் பெரும்பாலான பொழுது பிராண வாயு அவரது சுவாசத்தை எளிதாக்க கருவி மூலம் அளிக்கப்படுகிறது. மிகக் குறைவாக உணவருந்துகிறார். நினைவு துல்லியமாக இருக்கிறது. மிகவும் சிரமப்பட்டு பேசுகிறார்.  அவரைக் காணச் சென்றிருந்தேன். அவரது மகள் அவர் அருகிலேயே அமர்ந்திருக்கிறார். அவருக்குத் தேவையானவை அனைத்தையும் செய்து கொடுக்கிறார். அந்தக் காட்சி மனித வாழ்வின் மகத்தான தருணங்களில் ஒன்று என எனக்குத் தோன்றியது. இந்திய மரபு செல்வத்தின் தெய்வமாக திருமகளைக் கூறுகிறது. பிரியமும் பேரன்பும் கொண்ட மகள் திருமகளின் வடிவமே என்று எனக்குத் தோன்றியது.