மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தேன். அருந்தி எழும் நேரம். எனது அலைபேசி ‘’கிரிக்’’ என ஒற்றை ஒலியை எழுப்பியது தூரத்தில் கேட்டது. சாப்பிட்டுக் கை கழுவி விட்டு வந்தேன் வாசலில் யாரோ அழைக்கும் சத்தம். எதிர் வீட்டுக்காரர் வெளியூர் சென்றிருக்கிறார். என்னை அழைத்தவர் எதிர் வீட்டில் இருப்பவரின் உறவினர். ஊரில் இருந்து அப்போது தான் வந்திருக்கிறார். கதவின் சாவி அவர் கைவசம் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு முன்னால் இருக்கும் இரும்பு கேட்=டின் சாவி அவர் வசம் கொடுக்க மறந்திருக்கிறார்கள். அவருடைய மனைவி, மகன், மகள் அனைவரும் வந்திருந்தனர். அவர்களை என் வீட்டில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள சொல்லி விட்டு எதிர் வீட்டுக்காரரின் உறவினரை அழைத்துக் கொண்டு கடைத்தெருவில் இருக்கும் பூட்டு ரிப்பேர் செய்யும் ஒருவரிடம் அழைத்துச் சென்றேன். பூட்டு ரிப்பேர் செய்பவர் அங்கு இல்லை. விசாரித்ததில் மதியம் 1 மணிக்கு வரைக்கும்தான் அவர் இருப்பார் என்றார்கள். பின்னர் அங்கிருந்து 2 கி.மீ தள்ளி இருக்கும் இன்னொரு பூட்டு ரிப்பேர் செய்பவரிடம் சென்றோம். அவர் சாலையோரத்தில் ஒரு குடையை விரித்து அதன் கீழ் அமர்ந்து பூட்டு ரிப்பேர் செய்பவர். ‘’கடையை விட்டுட்டு வர முடியாதுங்க’’ என்றார். அங்கிருந்து பக்கத்தில் டூ வீலர் சாவி போடும் கடை இருந்தது. அவரும் இல்லை. அலைபேசி எண் எழுதப்பட்டிருந்தது. அலைபேசியில் அழைத்தோம். அவர் இன்னொரு இடத்தைச் சொன்னார். அங்கு சென்றோம். அது ஒரு கடை. இரு பணியாளர்கள் இருந்தனர். ஒருவர் வந்து பூட்டை திறப்பதாய் கூறினார். அழைத்துச் சென்று மீண்டும் கடையில் கொண்டு வந்து விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டார். நண்பரை அவருடன் ஆட்டோவில் வருமாறு கூறிவிட்டு நான் வீட்டுக்கு வந்தேன். கொஞ்ச நேரத்தில் பூட்டைத் திறக்கும் முஸ்தீபுகளின் ஒலி கேட்டது. பின்னர் ஆட்டோ கிளம்பிய சத்தம் கேட்டது. நண்பர் வந்து பூட்டு திறக்கப்பட்டது என்றார். நன்றி என மகிழ்ச்சியுடன் சொன்னார்.
Thursday, 25 December 2025
திறவுகோல் ( நகைச்சுவைக் கட்டுரை)
மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தேன். அருந்தி எழும் நேரம். எனது அலைபேசி ‘’கிரிக்’’ என ஒற்றை ஒலியை எழுப்பியது தூரத்தில் கேட்டது. சாப்பிட்டுக் கை கழுவி விட்டு வந்தேன் வாசலில் யாரோ அழைக்கும் சத்தம். எதிர் வீட்டுக்காரர் வெளியூர் சென்றிருக்கிறார். என்னை அழைத்தவர் எதிர் வீட்டில் இருப்பவரின் உறவினர். ஊரில் இருந்து அப்போது தான் வந்திருக்கிறார். கதவின் சாவி அவர் கைவசம் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு முன்னால் இருக்கும் இரும்பு கேட்=டின் சாவி அவர் வசம் கொடுக்க மறந்திருக்கிறார்கள். அவருடைய மனைவி, மகன், மகள் அனைவரும் வந்திருந்தனர். அவர்களை என் வீட்டில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள சொல்லி விட்டு எதிர் வீட்டுக்காரரின் உறவினரை அழைத்துக் கொண்டு கடைத்தெருவில் இருக்கும் பூட்டு ரிப்பேர் செய்யும் ஒருவரிடம் அழைத்துச் சென்றேன். பூட்டு ரிப்பேர் செய்பவர் அங்கு இல்லை. விசாரித்ததில் மதியம் 1 மணிக்கு வரைக்கும்தான் அவர் இருப்பார் என்றார்கள். பின்னர் அங்கிருந்து 2 கி.மீ தள்ளி இருக்கும் இன்னொரு பூட்டு ரிப்பேர் செய்பவரிடம் சென்றோம். அவர் சாலையோரத்தில் ஒரு குடையை விரித்து அதன் கீழ் அமர்ந்து பூட்டு ரிப்பேர் செய்பவர். ‘’கடையை விட்டுட்டு வர முடியாதுங்க’’ என்றார். அங்கிருந்து பக்கத்தில் டூ வீலர் சாவி போடும் கடை இருந்தது. அவரும் இல்லை. அலைபேசி எண் எழுதப்பட்டிருந்தது. அலைபேசியில் அழைத்தோம். அவர் இன்னொரு இடத்தைச் சொன்னார். அங்கு சென்றோம். அது ஒரு கடை. இரு பணியாளர்கள் இருந்தனர். ஒருவர் வந்து பூட்டை திறப்பதாய் கூறினார். அழைத்துச் சென்று மீண்டும் கடையில் கொண்டு வந்து விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டார். நண்பரை அவருடன் ஆட்டோவில் வருமாறு கூறிவிட்டு நான் வீட்டுக்கு வந்தேன். கொஞ்ச நேரத்தில் பூட்டைத் திறக்கும் முஸ்தீபுகளின் ஒலி கேட்டது. பின்னர் ஆட்டோ கிளம்பிய சத்தம் கேட்டது. நண்பர் வந்து பூட்டு திறக்கப்பட்டது என்றார். நன்றி என மகிழ்ச்சியுடன் சொன்னார்.