இன்று காலை எனது நண்பர் ஒருவர் சென்னையிலிருந்து பேசினார். அவர் ஒரு விஷயம் கேள்விப்பட்டிருக்கிறார். அதாவது ***** அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பள்ளியில் படிக்கும் மூன்று குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து உறவினர்கள் எவரும் இல்லாமல் பள்ளிக்குச் சென்று வருகின்றனர் என்று கூறினார். அந்த குழந்தைகளின் தாயார் ஆறு வருடம் முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்து போயிருக்கிறார். தந்தையார் சில வாரங்களுக்கு முன்னால் இறந்து போயிருக்கிறார். அந்த குழந்தைகளின் அண்டை வீட்டுக்காரர்கள் குழந்தைகளுக்கு உணவு தருகின்றனர். நண்பர் ஏதேனும் உதவ விரும்பினார். அவர்கள் கிராமத்துக்கு நேரடியாகச் சென்று அவர்களை சந்தித்து வருவோம் என சென்றேன். நேரில் பேசி விபரம் தெரிந்து கொண்டேன். நண்பருடன் நண்பர்களுடன் விவாதித்து விட்டு இரண்டு மூன்று நாட்களில் திரும்பி வந்து எவ்விதமான உதவியைச் செய்ய முடியுமோ அதனைச் செய்கிறோம் எனக் கூறி விட்டு வந்தேன்.
வெள்ளை உள்ளம் கொண்ட குழந்தைகள் மூவரும்.
அந்தக் குழந்தைகளுக்கு தெய்வம் துணையிருக்க வேண்டும்.