Thursday, 30 May 2019

உச்சிக்காலம்

அறிவுப் பெருவெளியில்
ஆடிக் கொண்டிருக்கிறான்
ஆடலரசன்
அக்னி நட்சத்திர அனல்
காய்கிறது
வெளிப் பிரகாரத்தில்
கைக்குழந்தையைச் சுமக்கும் பெண்ணின்
ஒரு கையை கெட்டியாக பிடித்துக் கொள்கிறான்
குழந்தைக்கு மூத்தவன்
சுடராட்டின் போது
பரவசம் கொள்ளும் தாய்க்கு
எப்போதுமே
பிராத்தனை ஒன்று
வெண்கல மணியை
தூரத்தில் கேட்கிறார்
கோவிந்தராஜன்
காலத்தின் உச்சியில்
சயனித்திருப்பவனும்
ஓயாமல் ஆடுபவனும்
அருகருகே
நடை சாத்தி விட்டு
சாயரட்சை எத்தனை மணிக்கு
என்று
சொல்லி அனுப்புகிறார்
தீட்சிதர்