Sunday 27 October 2019


நீ
பயணிக்கும்
வழித்தடங்களில்
கடந்து செல்கிறேன்
ஸ்தூலமான உலகில்
உன் இருப்பை
எப்படி புரிந்து கொள்வது?
ஒரு சிறு தூரலைப்  போல
அருவிச் சாரலென
உன்
இருப்பின்
ஈரம்
உயிர் கொண்டிருக்கிறது
உன்னைக் குறித்த
எல்லாம்
உயிராகவே பொருள் படுகின்றன
உன் புன்னகைகளும்
உன் உவகைகளும்
மட்டுமேயானதாக
இருக்கிறது
அக உலகங்கள்
இந்த உலகின்
ஒரு துளி
உலகமாவதன் விந்தைக்கு
நாம் என்ன பெயரிடலாம்
*