Sunday 27 October 2019


எப்படி சொல்வது
இது அரிதினும் அரிதானது என்பதை
ஒவ்வொரு  நாடித்துடிப்பும்
அமிர்தத்தைப் பிரவாகிக்கும் என்பதை
கண் மூடினால்
நூறு நூறு
நிறைநிலவுகள் வெளிச்சமிடும் என்பதை
சிக்கல்களும் முடிச்சுகளும்
இல்லாத
வாழ்க்கை வெளியில்
அலைந்து திரிவதை
வானகம் மண்ணில் தெரிவதை