Sunday 27 October 2019



நீ
கனிந்தாய்
அன்பின்
இரக்கத்தின்
கருணையின்
மேன்மைகளின்
தூய்மையின்
கனிவு
உன் உயிர்
இந்த உலகத்தில்
ஓயாமல்
பரப்பிக் கொண்டிருந்தது
அமரத்துவத்தை
அன்பின் கனிவில்


நீ
மானுடத்தின்
மகத்துவங்களுக்கு
முகம் அளித்துக் கொண்டிருந்தாய்
உன்  முன்னால்
உணரப்படுகிறது
இனிமையின் முடிவின்மைகள்