Friday 1 November 2019

தஞ்சை பயணச்சுற்று


ஆரணியில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். வளைகுடாவில் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர். பொறியியல் கல்லூரியில் நாங்கள் ஒன்றாகப் படித்தோம். நான் கட்டுமானவியல். அவர் மின்னியல். கல்லூரி விடுதியில் எனது நண்பரின் அறைவாசி. அந்த வகையில் அறிமுகமானார். இந்தியா வரும் போதெல்லாம் தொடர்பு கொள்வார். சில நாட்களுக்கு முன் அவரிடமிருந்து ஓர் அழைப்பு. இன்னும் கொஞ்ச நாளில் இந்தியா வருகிறார். தஞ்சைப் பிராந்தியத்தின் ஆலயங்களைக் காண வேண்டும் என்றார். மகிழ்ச்சியுடன் வரவேற்றேன். நான் ஒரு திட்டத்தை உருவாக்குகிறேன் என்று சொன்னேன்.

தஞ்சைப் பிராந்தியத்தில் ஆலயங்கள் காலை 7 மணியிலிருந்து மதியம் 12.30வரை திறந்திருக்கும். பின்னர் நடை சாத்தப்படும். 12.30-4.30 என நான்கு மணி நேரம். மாலை 4.30லிருந்து இரவு 9.30 வரை ஆலயங்கள் மீண்டும் திறந்திருக்கும். என்னுடைய காரில் பயணிப்பதாகத் திட்டம். காரில் பயணித்தால் காலை உணவை 6 மணிக்குள் முடித்து விட்டு புறப்பட்டு விடுவது உகந்தது. ஒவ்வொரு நாளும் மயிலாடுதுறையிலிருந்து பயணங்கள் துவங்கும். இரவு மயிலாடுதுறை திரும்பி விடுவதாக பயண வடிவமைப்பு.

நாள் 1

காலை 6 மணி – புறப்பாடு
காலை 6.30 மணி – சீர்காழி – காழிச் சீராம விண்ணகரம்
காலை 7.30 மணி – சீர்காழி – சட்டைநாதர் ஆலயம்
காலை 9.00 மணி – நாங்கூர் திவ்ய தேசங்கள்

வைணவத்தில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்கள் 108. அதில் 106 புவியுலகில் உள்ளவை. மற்ற இரண்டும் பரமபதமும், வைகுண்டமும். இந்த 108ல் 12 தலங்கள் நாங்கூரில் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளன. அவற்றில் ஆறு தலங்களை முதல் நாள் சேவித்து விடலாம்.

மதியம் 1 மணி – மயிலாடுதுறை திரும்பல்
மாலை 4 மணி – நரசிங்கப் பெருமாள் கோவில்,
மாலை 5 மணி – திருவெள்ளியங்குடி
மாலை 6 மணி – திருவாவடுதுறை
இரவு 8 மணி – மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி

நாள் 2

காலை 5 மணி – புறப்பாடு
காலை 6 மணி – சிதம்பரம் நடராஜர் ஆலயம்
காலை 9 மணி – ஸ்ரீமுஷ்ணம் பூவராகர் ஆலயம்
காலை 11.30 மணி – மேலக்கடம்பூர்
மதியம் 1 மணி – மயிலாடுதுறை திரும்பல்
மாலை 4 மணி – வலிவலம்
மாலை 6 மணி – திருக்கண்ணபுரம்
மாலை 8 மணி – நாகப்பட்டினம் சௌந்தர்ராஜ பெருமாள்

நாள் 3

காலை 8 மணி – புறப்பாடு
காலை 9 மணி – நாங்கூர் திவ்யதேசங்கள் 6
மதியம் 12 மணி – தலைச்சங்க நாண்மதியம்
மதியம் 1 மணி – மயிலாடுதுறை திரும்பல்
மாலை 4 மணி – கங்கை கொண்ட சோழபுரம்
மாலை 6 மணி- தாராசுரம்
இரவு 8 மணி- திருபுவனம்


நாள் 4

காலை 6 மணி - புறப்பாடு
காலை 7 மணி - திருஇந்தளூர்
காலை 8 மணி - திருவிளநகர்
காலை 9 மணி- செம்பொன்னார்கோவில்
காலை 10 மணி - பொன்செய்
காலை 11 மணி - ஆக்கூர்
மாலை 4 மணி - திருப்பாம்புரம்
மாலை 6 மணி - திருமீயச்சூர்
மாலை 7 மணி - சிறுபுலியூர்

நாள் 5

காலை 6 மணி - புறப்பாடு
காலை 7 மணி - கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில்
காலை 8.30 மணி- கும்பகோணம் ராமசாமி கோவில்
காலை 10 மணி - திரு ஆதனூர்
காலை 11 மணி - புள்ளம்பூதங்குடி
மாலை 4 மணி - மன்னார்குடி
மாலை 6 மணி - திருவாரூர்

நாள் 6

காலை 6 மணி - புறப்பாடு
காலை 7.30 மணி - பட்டீஸ்வரம்
காலை 9 மணி - திருக்கருகாவூர்
காலை 11 மணி - திட்டை
மாலை 4 மணி - கோவிலடி
மாலை 5.30 மணி  - ஆடுதுறை பெருமாள் கோவில்
மாலை 6.30 மணி - கபிஸ்தலம்
இரவு 7.30 மணி - ஒப்பிலியப்பன் கோவில்
இரவு 8.30 மணி - திருவிடைமருதூர்

ஆறு நாட்களில் 50 முக்கியமான ஆலயங்கள். அவர் வெளிநாட்டிலிருந்து ஆரணி வந்ததும் உடன் கிளம்பி மயிலாடுதுறை வரச் சொல்லியிருக்கிறேன். அவர் ஒரு மாதம் விடுமுறையில் வருகிறார். தஞ்சை ஆலயங்களைக் காண ஆறு நாட்கள் ஒதுக்குமாறு கேட்டுள்ளேன்.

தஞ்சைப் பிராந்தியத்தில் ஏறக்குறைய ஒவ்வொரு இரண்டு கிலோமீட்டருக்கும் ஒரு பேராலயம் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு திட்டமிட்டு பட்டியலிட்டுக் கொண்டு சென்றால் ஏழெட்டு பயணங்களில் அனைத்தையும் தரிசித்து விடலாம்.