Tuesday 31 December 2019

விட்டு விடுதலையாகி

ஓர் ஆண்டு நிறைவு பெறுகிறது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எத்தனையோ நிகழ்ச்சிகள். சம்பவங்கள். செயல்கள். சந்தோஷங்கள் மற்றும் துக்கங்கள். 

இந்த உலகம் அழகானது. மனிதர்களால் மட்டுமே ஆனதல்ல உலகம். மனிதர்களுக்காக மட்டும் ஆனதும் அல்ல உலகம். 

இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் எத்தனை எளியது மானுட வாழ்க்கை.

நாளில் சில கணங்களுக்கேனும் நமது இருப்பில் இருக்கும் இனிமையை உணர்வோம் எனில் வாழ்க்கைதான் எத்தனை இனியது.

இனிய வாழ்வு மானுடர் அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்று இந்த கணம் நினைக்கிறேன்.

எப்போதும் துணையிருப்பது பாரதியின் சொற்கள்.

மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; 
கனவு மெய்ப்பட வேண்டும், 
கைவசமாவது விரைவில் வேண்டும்; 
தனமும் இன்பமும் வேண்டும், 
தரணியிலே பெருமை வேண்டும். 
கண் திறந்திட வேண்டும், 
காரியத்தி லுறுதி வேண்டும்; 
பெண் விடுதலை வேண்டும், 
பெரிய கடவுள் காக்க வேண்டும், 
மண் பயனுற வேண்டும், 
வானகமிங்கு தென்பட வேண்டும்; 
உண்மை நின்றிட வேண்டும். 
ஓம் ஓம் ஓம் ஓம்