Wednesday 1 January 2020


ஓர் அன்னையின் முன்னால்
நதிக்கரையில்
வேர்கள்
பாதி நதியிலும்
பாதி நிலத்திலும்
பரவி நிற்கும்
பெரும் விருட்சத்தின் முன்னால்
பிராத்தனைகளுடன் ஏற்றப்பட்டுள்ள
தீபங்களின் முன்னால்
மௌனத்துடன்
உயர்ந்திருக்கும்
மலையின் முன்னால்
உலகைத் தன் சிறகுகளால்
அணைக்கும்
பறவையின் முன்னால்

சிந்தப்படும்
விழிநீர்

உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது
ஒவ்வொரு
புதிய
நாளையும்