Saturday 4 January 2020

ஒரு நண்பர்

சென்ற வாரம் ஒரு நண்பரைச் சந்தித்தேன். எங்கள் முதல் சந்திப்பு. இரண்டு நாட்கள் உடனிருந்தோம். ஒன்றாகத் தங்கியிருந்தோம். இரண்டு நாட்களும் கணமும் பிரியாமல் ஒன்றாகவே இருந்தோம். அமெரிக்காவில் மென் பொறியாளராக பணிபுரிகிறார். அவரது மனைவியும் அமெரிக்காவில் பணிபுரிகிறார். குழந்தைகள் அங்கேயே பள்ளிக்கல்வியைப் பயின்று கொண்டுள்ளனர். மரபிலக்கியத்தின் மீதும் நவீன இலக்கியம் மீதும் ஆழ்ந்த பற்று கொண்டவர். திருக்குறள் மீதும் கம்பராமாயணம் மீதும் பெரும் ஈடுபாடு கொண்டவர். இலக்கியம் குறித்தும் சமூகம் குறித்தும் இரண்டு நாட்களும் உற்சாகமாக விவாதித்தோம். பிரிய மனமின்றிப் பிரிந்தோம்.

நேற்று அலைபேசியில் அழைத்தார். அமெரிக்கா செல்ல விமான நிலையம் நோக்கி தனது சொந்த ஊரிலிருந்து காரில் சென்று கொண்டிருப்பதாக சொன்னார். 

அடுத்த ஆண்டு இந்தியா வரும் போது சந்திப்போம்; அதுவரை மின்னஞ்சல் தொடர்பில் இருப்போம் என்றார். 

மீண்டும் ஒரு நட்பு; ஒரு பிரிவு.