Monday, 27 April 2020

ஓர் ஆரம்பம்

இன்று ஒரு சிறுகதையை எழுதினேன். மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதனைக் கவனித்த போது எனக்கே வியப்பாக இருந்தது. ஒரு படைப்பை உருவாக்கும் போது அது நம்மை நமக்கு உணர்த்துகிறது. பெரும் ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. லௌகிகம் எத்தனைதான் பிரும்மாண்டமாக இருந்தாலும் அது எல்லைக்குட்பட்டதே. படைப்புச் செயல்பாடு வாழ்வின் நுட்பத்தை உணரும் செயல். ஒரு படைப்பாளியிடம் வாழ்க்கை அவனை எழுது எழுது என்று தூண்டியவாறே இருக்கிறது. அந்த தூண்டலே வாழ்க்கையை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. இன்று எழுதிய கதை மேலும் எழுத வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கியுள்ளது.