Friday 24 April 2020

மாலை உரையாடல்கள் - புதுச்சேரியிலிருந்து ஒரு வாசகர் கடிதம்

அன்பு பிரபு

உங்களது மாலை உரையாடல்கள் பத்தும் வாசித்தேன்.

பயணம் மற்றும் வாசிப்பின் ஊடாக உருவான சிந்தனை கொண்டு இந்த தேசத்தின் தன்மையைப் பற்றி நீங்கள் கற்றுணர்ந்தவற்றை ஐயம்திரிபின்றி ஆராய்ந்து, கருத்தில் தெளிந்து, அதன்படி நின்று அடைந்த புரிதல்கள் யாவையும் உங்களது தரப்பாக கொண்டு முன்வைத்த விதம் சிறப்பு.  இயல்பாக அமையப்பெறும் இது போன்ற சந்தர்ப்பங்களில் வெளிப்படும் போதே தன்னளவில் தொகுக்கப்பட்டு அவை மேலும் கூர்கொள்கின்றன.  கேட்பவர்க்கும் அவற்றை பரீசீலிப்பதற்கான ஆர்வத்தையும் தேடலையும் அதிகரிக்க வைக்க வல்லதாக திகழ்கின்றன.  எளிமையின் அழகியலோடு அடிப்படைகளை அத்தனை செறிவாக சொல்லிச்செல்லும் கலை கைவரப்பெற்றவர் நீங்கள் என்பது மீண்டும் நிரூபணம்.  

வாழ்த்துகள்.  

மிக்க அன்புடன்
மணிமாறன்.