Saturday 30 May 2020

மாற்றம்

அலைகடலின் முன்
ஈரக்காற்று முகம் தீண்ட
நனைந்த கால்களுடன்
தொடுவானத்தை
இமைக்காமல்
நீ
பார்த்துக் கொண்டேயிருந்த கணம்

நிழற்சாலையில்
சேர்ந்து
நடந்த போது
அன்றைய
புதிய மலர்
கண்டு
புன்னகைக்கையில்
எழுந்த ஒளி

மேகங்கள் நகரும் வானத்தை
குதூகலத்துடன்
அடையாளப்படுத்திய
உனது கை விரல்கள்

தீபச் சுடரொளி
பிரதிபலிக்கும்
உனது முகம்

பிரிவின் துயர் காட்டிய
கண்ணீர்த் துளிகள்

மணி ஒலிக்கையில்
கோபுரத்திலிருந்து
சடசடத்து எழும் பட்சிகள்
மௌனத்தில்
அமர்கின்றன
மீண்டும்