Monday 1 June 2020

சாட்சி

நாம்
ஏற்றிய தீச்சுடர்
தன்னியல்பாய்
இவ்வுலகெங்கும்
பரவ
கைகள் விரித்தது

நீ
நீர்த்திரை கண்களுடன்
அதனை
ஓர்
அருமணியாக்குவோம்
என்றாய்

கடலாழத்தில் அது ஒளி விடுவதைக் கண்டோம்
என சான்றுரைத்தன
மீன்கள்

அது வானத்து விண்மீன்களில் ஒன்றாய் இருப்பதை
தினமும் கண்டான்
இன்னும் மொழியத் துவங்காத
சிறு குழந்தை