Monday 8 March 2021

சாரம்

பிரவாகிக்கும் நதியில்
மிதக்கும் 
இலையும் மலரும்
துறையில்
நீரருந்தும்
ஆவினமும்
நதியை
என்னவாக உணர்கின்றன
*
மென்மையின் சாரல்கள்
நிறைந்திருக்கும்
உனது பிரதேசத்தின்
நிலத்தில்
உயிர்க்கும் 
உயிர்கள்
அடையும் அமரத்துவம்
எதனால்
*
உனது பிரியம்
என்பது
முடிவற்ற மன்னித்தலா
*