Wednesday, 30 June 2021

14

 உன்னை
மலர்கள் அறியும்
உன்னை
இறைமை அறியும்

Tuesday, 29 June 2021

15

 நீ
சூடிக் கொள்ளும்
மலரும்
மலர்களும்
உன்னிடம்
அத்தனை இயல்பாக
பொருந்திக் கொள்வது
எதனால்?

Monday, 28 June 2021

16

 மலரை அர்ப்பணிக்கிறேன்
மலரிடம் 
அர்ப்பணம் ஆகிறேன்

Sunday, 27 June 2021

17

 மலரின்
மகரந்தத்திலும்
வீற்றிருக்கிறது
இறைமை

Saturday, 26 June 2021

18

 ஒரு மலர்
பலவற்றை
உணர்த்துகிறது
மலர்தலையும்

Friday, 25 June 2021

19

தம்பூராவின் சுருதியில்
நாத ஸ்வர இசையில்
வீணையின் நரம்பொன்றின் அதிர்வில்
இசை பயிலும் மகவொன்றின்
குரலிசையில்
பாயும் போது
மலர்கிறாள்
காவேரி

Thursday, 24 June 2021

20

தவத்தில் சுடர்ந்த
ஒரு முனிவன்
குறுமுனிவன்
அவன்
கமண்டல நீராய்
மலர்ந்திருந்தது
யோகம்

அந்த மலர்
பரவியது
நிலத்தில்
கலையென
இசையென
காவிரி
என

Wednesday, 23 June 2021

21


நீ
உணர்ந்த கடவுளை
உணர்கிறேன்
நறு மணமாய்
நிறையும்
உன் இசை
மூலம்

Tuesday, 22 June 2021

22

 ஒரு மலர்
வான் நோக்குவது
போல
உன் குரல்
உன் இசை
மேலெழுகிறது
இறைமையை
நோக்கி


Monday, 21 June 2021

23


புல்லும்
ஒரு மலரென
புரியத் தொடங்குவது
எப்போது

Sunday, 20 June 2021

24


மருதநிலம்
காத்திருக்கிறது
மழைக்காக
வானம் மகரந்தமென
தூவுகிறது
மழையை
மழை கொண்ட நிலம்
பூக்கிறது
புல்லாக

Saturday, 19 June 2021

25

மருத நிலம்
நீரில்
பூக்கிறது
இளம் நாற்றுகளாக

Friday, 18 June 2021

26

புன்னகைக்கிறாய்
உதட்டினை மடித்துக் கொள்கிறாய்
இமை உயர்த்துகிறாய்
உள்ளம்கைகளில்
முகத்தினை வைத்துக் கொள்கிறாய்
ஒரு முகம்
எத்தனை 
மலராக மலர முடியும்

Thursday, 17 June 2021

27

மலர்க்கண்களால்
மலர்ப்பார்வையால்
நோக்குகிறாய்
உன் உலகம்
உன் உலகம்
நீர்மை
கொள்கிறது
உன் கண்கள்
நீர்த்திரை கொள்கின்றன
ஒரு கணம்
விழி மூடி
விழி திறக்கிறாய்
உலகில் மலர்கின்றன
ஆயிர மாயிரம்
மலர்கள்

Wednesday, 16 June 2021

28

ஒரு
மலரில்
அமிழ்ந்திருக்கிறது
ஒரு பெரும் காடு

Tuesday, 15 June 2021

29

சில்வண்டுகளின் ஒலி காட்டின் மௌனம்
மௌனத்தின் மீதேறி
ஊர்கின்றன
மலர்களின் மகரந்தங்கள் 

Monday, 14 June 2021

30

பறவைகள்
பறக்கும் மலர்கள் 

Sunday, 13 June 2021

31

மீன்கள் சலனமுறச் செய்யும்
நீர்மலர்த் தடாகத்தை
உன் மென் விரல்களால்
தீண்டுகிறாய்
சிலிர்ப்பு 

Saturday, 12 June 2021

32

உன் முகம்
ஒரு மலர்
உன் கண்கள்
இரு மலர்கள் 

Friday, 11 June 2021

33

வான் பார்க்கிறாய்
நிலம் பார்க்கிறாய்
காற்று தீண்டுகையில்
மேலும்
உயிர் கொள்கிறாய்
மலராக 

Thursday, 10 June 2021

34

மல்லிகை
இயல்பு கொள்ள
விரும்புவதாக
நீ
ஒருநாள்
சொன்னாய் 

Wednesday, 9 June 2021

35

ஒரு விதையின்
கனவில்
முடிவில்லாமல்
மலர்கள்
பூத்துக் கொண்டே
இருக்கின்றன 

Tuesday, 8 June 2021

36

உனது பிரதேசத்தில்
பேதம் இல்லை
துயரம் இல்லை
வலிகள் இல்லை
ஒரு மென் துடிப்பு மட்டுமே இருக்கிறது
உயிரின் துடிப்பு
உயிர் பூக்கும்
மண்ணின் துடிப்பு

Monday, 7 June 2021

37

நிலவு அறியும்
மலரை
மலர்கள் அறியும்
நிலவை 

Sunday, 6 June 2021

38

தடாகம் வானம்
பூத்திருக்கும்
சின்னஞ்சிறு மலர்கள்
விண் மீன்கள்
வெண் பெரும் மலர்
நிலவு 

Saturday, 5 June 2021

39

நிலவை
மலர் என்றும்
மலரை
நிலவு என்றும்
புரிந்து கொள்கிறது
அக்குழந்தை 

Friday, 4 June 2021

40

ஒரு மலர்
உடன் வருவதைப் போல
உடன் இருப்பதைப் போல
ஏன்
எல்லாரும் இருப்பதில்லை
என்ற வினா
அக்குழந்தைக்கு 

Thursday, 3 June 2021

41

ஒரு சிறு பூந்தோட்டம்
மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது
நம்பிக்கை அளிக்கிறது
துணை நிற்கிறது
தோட்டத்திற்கு 
தினமும்
நீர் வார்க்கும்
தோட்டக்காரன்
மகிழ்ச்சியை
நம்பிக்கையை
மலரச் செய்கிறான்
தோட்டத்துக்கு வெளியிலும் 

Wednesday, 2 June 2021

42

மலரின் ஒளி
எதனால்
ஆனது?

Tuesday, 1 June 2021

43

மலர்களுக்கும்
மலர்களின் மகரந்தங்களுக்குமான
உறவு
உனக்கும்
உனது அகத்துக்கும்