Tuesday 5 October 2021

தேவி

 நீ
ஒளிகளால்
தளிர்களால்
நீர்மையால்
ஆக்கப்பட்டுள்ளாய்
நித்தம் நிகழ்கிறது உன் மலர்தல்
மரணமில்லாப் பெருநிலை
வாய்க்கப் பெற்றவன்
உன்னை நோக்கி
எடுத்து வைக்கிறான்
ஒவ்வொரு அடியாக
முடிவின்மையில்