Saturday 2 October 2021

நிறைநிலவுச் சந்திப்புகள் - ‘’காவிரி போற்றுதும்’’

’’காவிரி போற்றுதும்’’ தன் செயல்பாடுகளைத் துவக்கி 18 மாதங்கள் ஆகிறது. ஒரு சிறிய குழுவால் எத்தனை முயற்சிகள் மேற்கொள்ள முடியுமோ அத்தனையையும் முயன்று பார்த்திருக்கிறோம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆற்ற வேண்டிய பணிகள் கடல் போல் முன்னால் விரிந்து கிடக்கின்றன. எந்த நீண்ட பயணமும் சிறிய உறுதியான முதல் அடியிலிருந்தே துவங்குகிறது. பெரும் சவால் நிறைந்த ஒரு காலகட்டத்திலும் ‘’காவிரி போற்றுதும்’’ உறுதியான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது. 

பழக்கமான வழமையான பாணிகள் இன்றி, நட்பாலும் சரியான புரிதலாலும் பிரியத்தாலும் பரஸ்பர நம்பிக்கையாலும் தம் செயல்களை ஆற்றியது ‘’காவிரி போற்றுதும்’’. இனியும் அவ்வாறே நிகழும். 

ஒவ்வொரு மாதமும் நிறைநிலவு தினத்தன்று இரவு 7 மணிக்கு குழு நண்பர்கள் சந்தித்து உரையாடி சென்ற மாதத்தில் நிகழ்ந்த பணிகளை மதிப்பிட்டு வரும் மாதத்தில் ஆற்ற வேண்டிய பணிகளைக் குறித்து விவாதித்து திட்டமிடலாம் என எண்ணம். ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஓர் நற்செயலைத் திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டும் என்பது விருப்பம். 

மகாத்மாவின் ஜெயந்தி தினத்தில் இந்த முன்னெடுப்பை அறிவிப்பது மகிழ்ச்சி தருகிறது. 

02.10.2021