Thursday 24 November 2022

ஆனைப் பிளிறல்

மௌனத்தால் நிரம்பியிருக்கும் ஓர் அடந்த காட்டில் சட்டென ஓர் ஆனையின் பிளிறல்  எழும்பி ஒலிப்பது போல தமிழில் ஒரு புதிய புனைகதையாளன் உருவாகியிருப்பதை இன்று அடையாளம் கண்டேன். தேர்ந்த புனைகதையாளனுக்குரிய எல்லா திறன்களும் நுட்பங்களும் வாய்க்கப் பெற்றவன் அவன். மொழிதலின் எல்லா சாத்தியங்களையும் திறம்படக் கையாளக் கூடிய திறமை பெற்றிருப்பவன் அந்த படைப்பாளி. இதுவரை அதிகம் அ-புனைவுகளை மட்டுமே அதிகம் எழுதியிருக்கிறான். இன்று அவனிடம் நீ ஒரு புனைகதையாளன் என்று சொன்னேன். அவனிடம் அவ்வாறு தெரிவித்தது அவனுக்கு ஒரு திகைப்பை உண்டாக்கியது. ஒரு வாசகனாக நான் அவனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். இனி அதிகம் புனைவுக்குள் மட்டுமே செயல்பட வேண்டும் என. என் வேண்டுகோளை அவன் ஏற்பான் என்று எண்ணுகிறேன்.