Wednesday 23 November 2022

நாங்கள் உடனிருப்போம் - 2

 அன்புள்ள அண்ணா,

உங்களின் ’’நான் தாக்கப்படலாம்’’ பதிவை வலைத்தளத்தில் படித்தேன். மரங்களை இழப்பது எப்படி வலிக்கும் என நன்றாக அறிவேன்.
  
நமது அதிகாரமும், அரசியலும் அனைத்தையும் பணமாகவே பார்க்கின்றன. எளியவன் என்றுமே எளியவனாகவே தான் இருக்க முடியும் அதிகாரத்தின் முன்னால். நீங்கள் அந்த மக்களுடன் இருப்பது அவர்களின் நல்லூழ். சற்றேனும் தைரியமாக உணர்வார்கள்.

மிக உண்மையாக அந்தப் பிரச்சினையைப் பற்றி எழுதியுள்ளீர்கள். 

உங்களுக்கு என் மனம் நிறை அன்புகள் அண்ணா. 

காவிரி போற்றுதும் அமைப்புக்கு என்னால் இயன்ற ஏதேனும் உதவி செய்ய விழைகிறேன். 

இறை என்றும் உங்களுடன் இருக்கட்டும். உங்கள் நலன் காக்கட்டும்.

அன்புடன்
உங்கள் தங்கை
எஸ். ஆர்