தீபத்துக்குக் கூட அடியில் நிழல் உண்டு. சூரியனையும் ஒரு நாள் கிரகணம் பீடிக்கிறது. இந்த அடிப்படையில் தி.ஜா எழுதிய சிறுகதை ஸ்ரீராமஜெயம். தி. ஜா வில் மூழ்க மூழ்க அவர் சர்வசாதாரணமாக சித்தரிப்பில் நிகழ்த்தியிருக்கும் மாயங்கள் உண்மையில் பிரமிக்க வைக்கின்றன. ஒரு ஆசான் எப்போதும் சமநிலை கொண்டிருப்பவன். எனினும் அவன் தன்னுள் ஆழ்ந்து பெற்ற பயிற்சியின் விளைவு அது. அவன் பயின்றிருக்கிறான் என்பதாலேயே அனைத்தையும் அவன் அறிந்தவன். கதாபாத்திரங்கள், நூதனமான சூழ்நிலைகள், தர்ம சங்கடங்கள் என அனைத்தையும் சர்வ சாதாரணமாக உருவாக்கிக் காட்டுகிறான் இந்த சிறுகதையின் ஆசிரியன்.