Friday 24 November 2023

மந்தார மலர்

 

14 மரங்கள் வெட்டப்பட்ட கிராமத்தின் அதே வீதியில் நாம் நட்ட 100 மரங்கள் இந்த இரண்டே கால் வருடத்தில் சிறப்பாக வளர்ந்து கணிசமான உயரத்தை எட்டியுள்ளன. மகிழம், பாரிஜாதம், மந்தாரை ஆகிய பூமரங்களும் கொன்றை, சொர்க்கம் ஆகிய நிழல் மரங்களும் நாவல்பழ மரமும் அங்கே உள்ளன. அங்கே மந்தாரை வண்ண மலராக பூக்கத் தொடங்கியுள்ளது. 

மக்கள் வழிபடும் ஆலயத்தை இடிக்கவும் மக்கள் வழிபடும் வேப்ப மரத்தை வெட்டவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுத்து நிறுத்த இரண்டு நாட்களில் பலமுறை அந்த கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த சிறுவன் ஒரு மந்தார மலரைப் பறித்து வந்து என்னிடம் காட்டினான். அதன் ஒளிப்படம் மேலே.