Sunday, 29 December 2024

சிறுகதை - தெருப்புழுதி - க. நா. சுப்ரமணியம்

 நம் கால்கள் நிலை கொண்டிருக்கும் பூமி இருபத்து மூன்று அரை பாகை சாய்ந்து மிக வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது. அதன் மிகப் பெரும் அளவால் அது வேகமாக சுழல்வதை நாம் உணராமல் இருக்கிறோம். சுழற்சி என்பது எதிர்பாராமைகளால் ஆனது. சீரான சுழற்சி கூட. லௌகிகம் என்பதே எதிர்பாராமைகளின் ஆட்டமே. அந்த எதிர்பாராமையின் ஆடலை வாழ்வின் ஏதோ ஒரு கணத்தில் கண்டு திகைத்து நிற்கின்றனர் யுகம் யுகமாக மானுடர்கள். அரசறிய வீற்றிருந்த வாழ்வொன்று ஆற்றங்கரை மரமென சரிந்து நிற்பதன் கதை க.நா.சு வின் ‘’தெருப்புழுதி’’.