Saturday, 28 December 2024

சிறுகதை - கல் நாயனம் - கி.ரா. கோபாலன்

 நாகேசன் ஒரு சிற்பி. முத்துக்குமரன் ஒரு நாதஸ்வரக் கலைஞன். அஞ்சனா நாகேசனின் தங்கை. அஞ்சனாவும் முத்துக்குமரனும் காதலர்கள். சகஜமான ஒரு உரையாடல் ஒன்றில் சிறு பூசல் உருவாகிறது நாகேசனுக்கும் முத்துக்குமரனுக்கும். அதாவது கல்லில் ஒரு நாயனம் செய்ய முடியுமா என இசைக்கலைஞன் சவால் விட அப்படி ஒன்று உருவாக்கினால் அதனை சுருதி சுத்தமாக வாசிக்க உன்னால் முடியுமா என பதில் சவால் விடுகிறான் சிற்பி. கல் நாயனத்தை சுருதி சுத்தமாக வாசிக்காமல் போனால் அஞ்சனாவை கல்யாணம் செய்யாமல் போவேன் என மேலும் ஒரு விஷயத்தையும் சொல்லி சவாலை இன்னும் தீவிரமாக்குகிறான் இசைக்கலைஞன். அஞ்சனா இவர்கள் சவாலுக்கு மத்தியில் தன் காதல் சிக்கிக் கொண்டதே என கலங்குகிறாள். கல் நாயனம் சுருதி சுத்தமாக முத்துக்குமரனால் வாசிக்கப்பட்டால் இனி உளியையே தொடுவதில்லை என அறிவிக்கிறான் நாகேசன். கல் நாயனம் செய்யப்படுகிறது. சுருதி சுத்தமாக வாசிக்கவும் படுகிறது. போட்டியில் வென்ற முத்துக்குமரன் நாகேசனின் சிற்பத் திறனை மெச்சுகிறான். அவன் சிற்பியாக தொடர்ந்து செயல்படுவேன் என்று அறிவித்தால் மட்டுமே அஞ்சனாவை மணப்பேன் என்கிறான். அனைத்தும் சுபமாக நிகழ்கின்றன.