இன்று காலை ’’அதிகாரமும் மதிப்பும்’’ என்ற பதிவை எழுதினேன். இன்று மாலை இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த போது காலை எழுதிய பதிவில் ஒரு முக்கிய விஷயம் விடுபட்டிருப்பதை உணர்ந்தேன். அது எவ்விதம் விடுபட்டுப் போனது என்று ஆச்சர்யப்பட்டேன். பின்னர் அந்த விஷயம் விடுபட்டுப் போனதற்கான காரணம் என்ன என்பதைப் புரிந்து கொண்டேன்.
நீங்கள் அரசு அலுவலகம் சென்றிருக்கிறீர்களா என்ற வினாவுடனேயே எனது பதிவைத் துவக்கினேன். குடிமக்கள் எவரும் செல்லாத ஒரு துறை இருக்கிறது. அந்த துறையில் லட்சக்கணக்கானோர் பணி புரிகின்றனர். தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணிக்காலம் முழுவதும் பணி புரிகின்றனர். உலகின் பெரும் பொருளியல் சக்திகள் தங்கள் வணிக நோக்கங்களுக்காக நாடு பிடிக்கும் பேராசையைத் தடுத்து நிறுத்துகின்றனர். இந்திய இராணுவம் இந்திய அரசுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டது. ராணுவம் எல்லையில் நாட்டைக் காப்பதால் மட்டுமே நாம் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சாமானியத்தின் அளவீடுகளால் மதிப்பிட முடியாதது இந்திய ராணுவம்.