நேற்று நண்பர் ஒருவருடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். அவரை நான் இன்னும் நேரில் சந்திக்கவில்லை. அலைபேசியில் அவ்வப்போது பேசிக் கொள்வோம். ஊருக்கு வாருங்கள் என ஒவ்வொரு முறையும் அவரிடம் கூறுவேன். இந்த மாதம் ஆகஸ்ட் 15 ஐ ஒட்டி வருவதாகக் கூறினார். அவர் கூறிய ஒரு விஷயம் என்னை யோசிக்க வைத்தது. அவர் காலை எழுந்தவுடன் எனது வலைப்பூவை வாசிப்பேன் என்று சொன்னார். தினம் ஒரு பதிவாவது எழுத வேண்டும் என நினைப்பேன். பெரும்பாலும் எழுதி விடுவேன். அப்படியும் ஓரிரு நாட்கள் விடுபடும். முன்னரெல்லாம் இரவு 12 மணிக்கு பதிவு வெளியாகும் வண்ணம் முன்பதிவு செய்து வைத்திருப்பேன். அந்த வழக்கம் எப்படியோ தவறி விட்டது. நண்பர் கூறியதிலிருந்து தினமும் இரவு 12 மணிக்கு வெளியாகும் வழக்கத்தை மீண்டும் செயல்படுத்தலாம் என உள்ளேன்.