இன்று காலைப் பொழுதில் கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையின் ‘’ஆசிய ஜோதி’’ வாசித்தேன். புத்தனின் கதையும் புத்தனின் சொற்களும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கூறப்பட்டுக் கொண்டேயிருக்கிறது ; ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கேட்கப்படும் ஒவ்வொரு முறையும் அந்தக் கதையும் அந்தச் சொற்களும் கேட்பவர் உள்ளத்தை உருக்கிக் கொண்டேயிருக்கிறது. அவன் கதை கேட்பது ஓர் புனிதச் செயல்.