தான் வாழ்ந்த பிரதேசத்தில் 384 ஆலமரங்களை நட்டு பராமரித்து விருட்சமாக்கிய திம்மக்கா நிறைவாழ்வு வாழ்ந்து இன்று தனது 114 வயதில் இயற்கை எய்தினார். அவரது சேவையைப் பாராட்டி 2019ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு ‘’பத்மஸ்ரீ’’ விருது அளித்து கௌரவப்படுத்தியது. கருநாடக மாநில அரசும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அவருக்கு பல விருதுகளை அளித்துள்ளன.
அற்புதமான பணியொன்றைச் செய்த அற்புதமான மனிதருக்கு அஞ்சலி.