Wednesday 13 June 2018

சுடராட்டு




விண் சிவந்து
இருள் மெல்ல நிரம்பும்
அந்தியில்
சிறு தீச்சுடர்களின் நதி
ஓடிக்கொண்டிருக்கிறது
மலர்ப்பரப்பில்

படிகளில்
அமர்ந்திருக்கின்றனர்
பிறந்து இறந்து
இறந்து
பிறக்கும்
மானுடர்கள்
அந்தம் அற்ற ஆண்டுகளாக

உனது
பூசனைத் தாலம்
நிரம்பியிருக்கிறது
மலர் அடுக்குகளால்
செஞ்சுடரால்

தீபம்
ஏந்தியிருக்கும்
ஒரு தீச் சுடரென
நீ
வந்து சேர்கிறாய்
முடிவிலா
நதிக்கு

உனது கனிவு
மலராகவும்
உனது ஆசி
சுடராகவும்
பயணிக்கத் துவங்குகிறது
செங்கதிர்
முளைக்கும் வரை