Saturday 30 June 2018

மழை மேகம்

மீண்டும் மீண்டும்
மீண்டு
வருகையில்
உன் நம்பிக்கைகள்
சலிப்பின்
ஒரு துளி இன்றி
அமைதிப்படுத்துகின்றன
குருதியும்
மறுபக்கம் கண்ணீரும்
நிறைந்து வழியும்
அகத்தில்
உன் இருப்பு
சொல்லெடுக்காமல்
மௌனம்
கொள்கிறது
ஒவ்வொரு முறையும்
மலர்களைத் தவற விடும்
கரத்தில்
எப்படியோ
வந்து சேர்கிறது
கொலைவாள்
முடிவில்லாமல்
ஓடிக் கொண்டேயிருக்கிறேன்
அகம்
அடங்கா வஞ்சத்துடன்
கை நழுவிப் போன
வாளை
தேடிக் கொண்டிருந்த போது
உன் சிரிப்பின்
ஒளி
மின்னியது
பின்னர்
இடியோசையாய்க்
கேட்டது