Friday 5 July 2019

அருவம்

நீ உருமாறிக் கொண்டேயிருந்தாய்
மண் கிழித்து மேலேறும் முளையாக
மழலை முகம் கொண்ட தளிராக
சின்னஞ்சிறு அழகாக
இளமரமாக
இலையெல்லாம் பூவான வசந்தமாக
கனி கொத்த சூழும் புள் திரளாக

அன்பின் ஊழ்கத்தில்
நீ
இப்போது
விதைக்குள் நிறையும்
ஆகாயமாகிறாய்