பெருநதியே
பேரன்னையே
உன் நதியின் கரையில் நிற்கிறேன்
நீ புன்னகைக்கிறாய்
பிரியத்துடன் கரம் நீட்டுகிறாய்
உன் குளிர்ச்சியில் கரைகின்றன
ஜென்மங்களின் முடிவின்மை
ஜீவ மரண அவஸ்தைகள்
மூழ்கும் போது
உனது அன்பின் நீர்மையால் மட்டுமே
சூழப்படுகிறேன்
உனது நீராழங்களில் இருந்து
உருவாகி வருகிறது
கரையேறிச் செல்பவனின்
விடுதலை