Saturday 3 August 2019

விடுதலை



பெருநதியே
பேரன்னையே
உன் நதியின் கரையில் நிற்கிறேன்
நீ புன்னகைக்கிறாய்
பிரியத்துடன் கரம் நீட்டுகிறாய்
உன் குளிர்ச்சியில் கரைகின்றன
ஜென்மங்களின் முடிவின்மை
ஜீவ மரண அவஸ்தைகள்
மூழ்கும் போது
உனது அன்பின் நீர்மையால் மட்டுமே
சூழப்படுகிறேன்
உனது நீராழங்களில் இருந்து
உருவாகி வருகிறது
கரையேறிச் செல்பவனின்
விடுதலை