திருவாரூரில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரது தந்தை ஓய்வு பெற்ற அரசுக் கல்லூரி முதல்வர். கல்லூரி முதல்வராயிருந்து ஓய்வு பெற்றவர் என்பதால் அனுபவமிக்கவர் என ஒரு தனியார் பள்ளி அவரை பள்ளியின் ஆலோசகர் என்னும் பொறுப்பில் நியமித்து பள்ளி தொடர்பான எல்லா முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை அளித்தது. நண்பரின் தந்தைக்கு பள்ளிக்கு தினமும் சென்று வருவார். வருடங்கள் சில சென்றன. நண்பரின் தந்தை பொறுப்பில் இருக்கும் பள்ளியில் மாணவர் சேர்க்கை கணிசமாக குறைய ஆரம்பித்தது. நிர்வாகம், வரவு செலவு ஆகிய விஷயங்களில் துல்லியம் இருந்தது. ஆனால் மாணவர்கள் புதிதாக சேருவது மிகவும் குறைந்து போனது. வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கை 40 ஆக இருந்தது 25 ஆகக் குறைந்தது. அதனால் சில ஆசிரியர்களை பணியிலிருந்து அனுப்பி விட்டு இருக்கும் ஆசிரியர்களுக்கு கூடுதல் வகுப்புகளை அளிக்க ஆரம்பித்தனர்.
நண்பர் என்னிடம் சொன்னார். ‘’அப்பா ! கவர்மெண்ட் காலேஜ்ல பிரின்சிபால் ஆக இருந்தவங்க. அங்க அட்மினிஸ்ட்ரேஷன் எப்படின்னா ஏதாவது ஒரு விஷயமோ பிரச்சனையோ கவனத்துக்கு வந்தா அது மேல எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாங்க. சும்மா அப்படியே போட்டு வச்சிடுவாங்க. எந்த முடிவும் எடுக்கறதில்லை என்பதே முடிவு. இந்த பிரைவேட் ஸ்கூல்லயும் ஃபோர்ஸ் ஆஃப் ஹேபிட் ல அந்த மாதிரியே முடிவெடுக்கறாங்க. அதனால பல விஷயம் தேங்கி நிக்குது. அதான் அட்மிஷன் குறையுது’’
நண்பரின் குடும்பத்தினரின் நண்பர் தந்தையின் வயதைக் காரணம் காட்டி பள்ளிப் பணியிலிருந்து விலகிடுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் அப்பணியிலிருந்து விலகினார்.