நீ
உனது மென் இயல்புகள்
காக்கும் மௌனம்
அழகுணர்வு
பிறர் பொருட்டு
நீ சிந்தும் கண்ணீர்த்துளிகள்
பிறருக்காக
நீ ஏற்கும் வலிகள்
நீ
தரும் ஆறுதல்கள்
பூத்திருக்கும் மலர் மரத்தை
மெல்ல நடக்கும் சிறிய ஆற்றை
சிறு புள்ளை
குட்டி நாய் ஒன்றை
மழைத்துளிகளை
சந்தோஷம் தரும் நிறங்களை
எழுதினாலும்
அவை
உன்னைப் பற்றியதாகவே
ஆவது
எப்படி