ஒரு கிராமம்
சாலையை ஒட்டி
நெல்வயல்களின் களம்
அதன் ஓரத்தில்
ஓர் அரசமரம்
ஐம்பதாண்டு இருக்கும்
ஐம்பதாண்டுகளாக
காலையும் மாலையும்
கோழி
மரத்தடியில்
சருகுகளைப் புரட்டி கொத்திக் கொண்டிருக்கிறது
ஐம்பதாண்டுகளாக
பட்சிகள் அமர்கின்றன
ஐம்பதாண்டுகளாக
நிழலுக்கு அமர்கிறான் ஒருவன்
ஐம்பதாண்டுகளாக
பார்த்தும்
பார்க்காமலும்
செல்கிறார்கள் மனிதர்கள்
பார்த்தும்
பார்க்காமலும்
செல்லும்
மனிதர்களை
தினமும் பார்க்கிறது
உதய அஸ்தமனம்
பார்க்கும்
காற்று வீசும் போது
இலைகளை
அசைக்கும் மரம்