வியர்த்த உடல் புவியால் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்தது
தீரும் கணக்கின் நிம்மதி
மூச்சின் நடனம் புதுவிதமாய்
உள்ளும் வெளியும்
வந்து சுழன்று சென்று
ஞாபகங்கள் ஒளி வெளியில்
மிக பக்கத்தில் நின்றன
ஒரு குழந்தை முகம்
உன் முகம்
அப்போதும்
உன்னிடம் ஏதோ சொல்ல வருகிறேன்
கையில் ஒரு வசீகரமான மலர்
நீ கொடுத்ததா என யோசிக்கிறேன்
உனக்கு கொடுக்க விரும்புகிறேன்
உயிர்க்காற்றின் உச்ச கணம்
சூட்சுமக் கரங்களில் மலர்
விண்ணகம்
ஒளி உலகம்
ஒளி