உன்னை
உச்சி முகரும் போது
எண்ணிக் கொள்ளும் போது
மெச்சிப் புகழும் போது
உன் முகத்தை கைகளில் ஏந்திக் கொள்ளும் போது
தழுவிக் கொள்ளும் போது
ஒவ்வொரு முறையும்
தூய நீராழங்களில்
மூழ்கி
நீராடி எழுகிறேன்
அதிகாலைப் பனியை
நுனியில்
சூடியிருக்கும் புற்கள்
விளிம்பில்
மண்டியிருக்கும்
மென் ஈர மண் சாலையில்
தனியே
நடக்கிறேன்
விண் அளவு அகத்துடன்