Sunday, 4 October 2020

சாரம்

நீ
உனது மென் இயல்புகள் 
காக்கும் மௌனம்
அழகுணர்வு
பிறர் பொருட்டு
நீ சிந்தும் கண்ணீர்த்துளிகள்
பிறருக்காக
நீ ஏற்கும் வலிகள்
நீ
தரும் ஆறுதல்கள்

பூத்திருக்கும் மலர் மரத்தை
மெல்ல நடக்கும் சிறிய ஆற்றை
சிறு புள்ளை
குட்டி நாய் ஒன்றை
மழைத்துளிகளை
சந்தோஷம் தரும் நிறங்களை

எழுதினாலும்

அவை
உன்னைப் பற்றியதாகவே
ஆவது
எப்படி