வீட்டு உரிமையாளருக்கும் வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவருக்குமான உறவு அத்தனை சீரானது அல்ல ; எனினும் விதிவிலக்குகளும் உண்டு. பாட்டியா வீட்டு உரிமையாளர். அவர் வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்கு குடி வர உத்தேசிப்பவர் எதிர்கொள்ளும் அனுபவங்களே தி.ஜா வின் ‘’பாட்டியா வீட்டில் குழந்தைக் காட்சி’’.
Sunday, 9 February 2025
Friday, 7 February 2025
மனிதாபிமானம்
1970 ஐ ஒட்டிய ஆண்டுகளில் இந்தியா தன்னை பொருளியல் ரீதியாக நிலை நிறுத்திக் கொள்ள முயன்று கொண்டிருந்த ஆண்டுகள். சுதந்திரம் அடைந்து 20 ஆண்டுகள் ஆகியிருந்தன. நாட்டின் வரி வருவாயை எவ்விதம் பெருக்குவது என்பது அரசின் முக்கிய கரிசனமாக இருந்தது. இந்த பின்னணியில் மத்திய தர வாழ்க்கை என்பது பல்வேறு நெருக்கடிகளைக் கொண்டது. ஒரு மத்திய வர்க்க மனிதன் ஒரு நெருக்கடியான பஜாரில் கைக்கடிகாரம் பழுது நீக்க செல்லும் கதை தி.ஜா வின் ‘’மனிதாபிமானம்’’.
Thursday, 6 February 2025
பாயசம்
தமிழின் ஆகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று.
அமுதக்கடல் கடையப்பட்டால் முதலில் விஷத்தையே உமிழ்கிறது என்னும் போது சாமானிய மானுடன் அகம் குறித்து வேறு என்ன சொல்லி விட முடியும்?
காபி
பள்ளியில் சிறுவர்களாக இருக்கும் இரு மாணவர்கள். ஒருவன் செல்வந்தன். இன்னொருவன் வறியவன். இருவருக்குமே அன்னை மேல் பெரும் பிரியம். காலச் சக்கரம் சுழல்கிறது. ஒரு மாணவன் முதலாளியாகவும் இன்னொரு மாணவன் அவனது சமையல்காரனாகவும் இருக்கிறார்கள். சமையல்காரனுக்கு முதலாளி தன் வகுப்பு மாணவன் என்பது தெரியும். முதலாளிக்குத் தெரியாது. ஒரு சந்தர்ப்பத்தில் தெரியவருகிறது. அப்போது அந்த இரண்டு பால்ய சினேகிதர்களும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதே தி.ஜா வின் ’’காபி’’.
Wednesday, 5 February 2025
சீனுவுடன் சில மணி நேரம்
Sunday, 2 February 2025
மனநாக்கு
ஒவ்வாத காமம் ஒருவன் மனதில் ஏறுகிறது. ஆட்கொல்லி என அவனைச் சூழ்கிறது. திமிறுகிறான். மீள விரும்புகிறான். ஒரு சிறுவன் உற்சாகமாக அட்டைப்பெட்டி ஒன்றை காலால் எத்தித் தள்ளி சாலையில் நடப்பதைக் காண்கிறான். அந்த காட்சி அவனுக்குள் ஒரு நல்மாற்றத்தை உண்டாக்குகிறது. இதுவே தி.ஜா வின் ‘’மனநாக்கு’’.
Saturday, 1 February 2025
பூச்சி டயலாக்
பாரதியார் ‘’காக்காய் பார்லிமெண்ட்’’ என்ற கதையை எழுதியிருக்கிறார். அதில் காகங்கள் கதாபாத்திரங்கள். தி.ஜா பூச்சிகளைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு எழுதியிருக்கும் கதை ‘’பூச்சி டயலாக்’’.
பஸ்ஸூம் நாய்களும்
மாநகரம் பேதங்களின் உலகம். பேதங்களின் வெவ்வேறு வகை மாதிரிகள் நாளும் பொழுதும் காட்சியாகும் இடம் மாநகரம். நடுத்தர வர்க்க ஆசாமி ஒருவர் மாநகரம் ஒன்றின் அல்லல்களை அதில் தனது கையறு நிலையை கூறும் கதை ‘’பஸ்ஸூம் நாய்களும்’’.
நேத்திக்கு
அறியாமையிலும் தமோ குணத்திலும் மூழ்கியிருக்கும் ஒருவர். அவருக்கு ஏற்றாற் போன்ற ஒரு மோசமான குழாம். சாரமின்மையின் இருளில் திளைக்கின்றனர் அவர்கள். அதனை ஒரு சிறு குழந்தை காண நேர்கிறது. தன் மழலை மொழியில் அச்சூழலின் கதையைச் சொல்கிறது. சாரமின்மையின் பலியாக ஒரு பேச முடியாத ஜீவன் பலியாகிறது. இதன் கதையே ‘’நேத்திக்கு’’.
தற்செயல்
பால்ய சினேகிதர்கள் வெகு நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். வாழ்க்கை இருவரிடமும் எண்ணற்ற மாறுதல்களைக் கொண்டு வந்திருக்கிறது. இருவரின் வாழ்க்கையிலும் திருப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உறவினர் திருமண விழா ஒன்றில் இருவரும் சந்தித்து உரையாடுகையில் இருவரும் சொல்லும் தத்தமது கதையே தி.ஜா வின் ‘’தற்செயல்’’