Saturday 17 March 2018

நீர் வேட்டை

வரலாற்று நதியின்
கரை நகரில்
நிகழத் துவங்கியது
நீர் வேட்டை

ஆழ்ந்து
ஆழ்ந்து
எலிகள் போல்
துளைகளிட்டனர்
நகர் மாந்தர்

மணலின்
ஊற்று முகங்களுக்கு
தேடி சலித்தன
விழிகள்

வெவ்வேறு நிறங்களில்
மண்
வெளியே
குமிந்து
கொண்டிருந்தது

வேட்கை
கொண்ட
மக்கள்
தொலை ஆழங்களை
வசப்படுத்த
ஆயத்தமாயினர்

திசைகளை ஆடையாய்க் கொண்ட
கடந்து போகும் துறவி
சிரித்துக் கொண்டே சொன்னான்
எளிமையாய் இருங்கள்
கருணையை வேட்டையாடிப் பெற்றிட முடியாது