வரலாற்று நதியின்
கரை நகரில்
நிகழத் துவங்கியது
நீர் வேட்டை
ஆழ்ந்து
ஆழ்ந்து
எலிகள் போல்
துளைகளிட்டனர்
நகர் மாந்தர்
மணலின்
ஊற்று முகங்களுக்கு
தேடி சலித்தன
விழிகள்
வெவ்வேறு நிறங்களில்
மண்
வெளியே
குமிந்து
கொண்டிருந்தது
வேட்கை
கொண்ட
மக்கள்
தொலை ஆழங்களை
வசப்படுத்த
ஆயத்தமாயினர்
திசைகளை ஆடையாய்க் கொண்ட
கடந்து போகும் துறவி
சிரித்துக் கொண்டே சொன்னான்
எளிமையாய் இருங்கள்
கருணையை வேட்டையாடிப் பெற்றிட முடியாது
கரை நகரில்
நிகழத் துவங்கியது
நீர் வேட்டை
ஆழ்ந்து
ஆழ்ந்து
எலிகள் போல்
துளைகளிட்டனர்
நகர் மாந்தர்
மணலின்
ஊற்று முகங்களுக்கு
தேடி சலித்தன
விழிகள்
வெவ்வேறு நிறங்களில்
மண்
வெளியே
குமிந்து
கொண்டிருந்தது
வேட்கை
கொண்ட
மக்கள்
தொலை ஆழங்களை
வசப்படுத்த
ஆயத்தமாயினர்
திசைகளை ஆடையாய்க் கொண்ட
கடந்து போகும் துறவி
சிரித்துக் கொண்டே சொன்னான்
எளிமையாய் இருங்கள்
கருணையை வேட்டையாடிப் பெற்றிட முடியாது