கடற்கரையில்
அலை நனைக்கும் கால்களில்
ஒட்டிக் கொள்ளும் நுரை
காணாமல் போகிறது
உடனே
மொட்டை மாடியில்
படுத்திருக்கும்
ஆரம்ப நிமிடங்களில்
நீங்காமல் இருக்கிறது
பெருஞ்சுமை
நான்
காணாமல் போகும் காட்டில்
நிகழ்கிறது
மறுபிறப்பு
இரண்டு குன்றுகளுக்கு
இடைப்பட்ட
குறுகிய பாதை
கடக்கப்படும் போது
முகத்தில் அறைகிறது
தண்ணென்னும் காற்று
ஆர்வத்துடன் காண்கின்றன
வானத்து மீன்கள்
பாலைவனத்தின் ஒற்றைப் பயணியை
20.03.2018
10.15
அலை நனைக்கும் கால்களில்
ஒட்டிக் கொள்ளும் நுரை
காணாமல் போகிறது
உடனே
மொட்டை மாடியில்
படுத்திருக்கும்
ஆரம்ப நிமிடங்களில்
நீங்காமல் இருக்கிறது
பெருஞ்சுமை
நான்
காணாமல் போகும் காட்டில்
நிகழ்கிறது
மறுபிறப்பு
இரண்டு குன்றுகளுக்கு
இடைப்பட்ட
குறுகிய பாதை
கடக்கப்படும் போது
முகத்தில் அறைகிறது
தண்ணென்னும் காற்று
ஆர்வத்துடன் காண்கின்றன
வானத்து மீன்கள்
பாலைவனத்தின் ஒற்றைப் பயணியை
20.03.2018
10.15