Wednesday 28 March 2018

ஐந்து நிலம்

கடற்கரையில்
அலை நனைக்கும் கால்களில்
ஒட்டிக் கொள்ளும் நுரை
காணாமல் போகிறது
உடனே

மொட்டை மாடியில்
படுத்திருக்கும்
ஆரம்ப நிமிடங்களில்
நீங்காமல் இருக்கிறது
பெருஞ்சுமை

நான்
காணாமல் போகும் காட்டில்
நிகழ்கிறது
மறுபிறப்பு

இரண்டு குன்றுகளுக்கு
இடைப்பட்ட
குறுகிய பாதை
கடக்கப்படும் போது
முகத்தில் அறைகிறது
தண்ணென்னும் காற்று

ஆர்வத்துடன் காண்கின்றன
வானத்து மீன்கள்
பாலைவனத்தின் ஒற்றைப் பயணியை

20.03.2018
10.15